திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காலையில் அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. பகலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து, பாதயாத்திரை பக்தர்கள், கடலில் புனித நீராடி, கோவிலில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும், காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பகலில் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சேர்கிறார். அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது.
Advertisement
மாலையில் சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.