தற்போதைய செய்திகள்

வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் : விஜயபாரத மக்கள் கட்சி கோரிக்கை

ராணிப்பேட்டை சம்பவத்திற்கு காரணமாத வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டுமென விஜயபாரத

எம். அருண்குமார்

ராணிப்பேட்டை சம்பவத்திற்கு காரணமாத வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டுமென விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ராணிப்பேட்டையிóல தோல் தொழிற்சாலை பொது சுத்திகரிப்பு நிலைய கழிவு சேகரிப்பு தொட்டி உடைந்து அருகில் உள்ள தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் வேதனைக்குரியது. 

இதுவரை தோல் தொழிற்சாலை கழிவுநீரில் சிக்கியும், விஷவாயு தாக்கியும் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. மேலும் தோல் கழிவால் மாசுக்கேடு சம்பந்தமாக விவசாயிகள் சார்பாக உச்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக பராமரிப்பதாகவும், தோல் தொழிற்சாலை கழிவுநீரை முழுமையாக சுத்தம் செய்வதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது வேதனைக்குரியதாகும்.

மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.  அதனால் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.  மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT