முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2015 at 8:49 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:09 AM

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

        ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார்(45). இவர், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், செல்வக்குமார் மீது போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர்.

          இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்வக்குமார், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.