முகப்பு
தற்போதைய செய்திகள்

காவல்கிணறில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களது சடலம் பேருந்தின் உதிரிபாகங்களுக்குள் சிக்கியதால் உடனடியாக மீட்கமுடியவில்லை. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் பணகுடி போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →