முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டையில் சாலை விபத்து : ஒருவர் பலி; இருவர் படுகாயம்

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை நேர்ந்து சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Updated On : 23 பிப்ரவரி, 2015 at 11:11 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:17 AM

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை நேர்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து பற்றிய விவரம் வருமாறு :

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கரகராட்டம், கச்சேரி என வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

கரம்பக்குடி அருகே உள்ள காத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (22) மற்றும் அவர் நண்பர்கள் ஜோதிபாபு, பாண்டியன் ஆகியோர், கோயில் திருவிழாவைப் பார்த்துவிட்டு இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். புதுக்கோட்டை கிழக்கு ராஜ வீதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.