சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து முதியவர் சாவு
சிதம்பரம் குமரன்தெருவைச் சேர்ந்தவர் அழகுரத்தினம் (64). பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் வளர்மதி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் புதன்கிழமை
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய வந்த முதியவர் மயங்கி கீழே விழுந்து மரணமடைந்தார்.
சிதம்பரம் குமரன்தெருவைச் சேர்ந்தவர் அழகுரத்தினம் (64). பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் வளர்மதி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் புதன்கிழமை காலை சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனைவியுடன் ஆதார் அட்டை பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அலுவலக நுழைவுவாயில் அருகே மயங்கி கீழே விழுந்து இறந்து போனார். மாரடைப்பால் இறந்ததாக போலீஸார் தெரிவித்தார். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.