எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம்: சிதம்பரம் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு
நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில்
சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலத்திற்கு தடை மீறி சென்றதாக அதிமுகவினர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஊர்வலம் மேலரதவீதி வழியாக சென்றதால், தடையை மீறி நகரச் செயலாளர் நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் தலைமையில் 5 கார்கள், 25 வாகனங்களுடன் ஊர்வலமாக சென்றதாக நகரப் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.