முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை தை அமாவாசை: சிதம்பரம் தசதீர்த்தங்களில் ஸ்ரீநடராஜப் பெருமாள் தீர்த்தவாரி

ரிஷப வாகனத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் (ஸ்ரீசந்திரசேரர்) நடராஜர் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகளில் வலம் வந்து முதல் தீர்த்தமான சிவகங்கையில் தீர்த்தவாரி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

தை அமாவாசையை முன்னிட்டு சிதம்பரம் தச தீர்த்தங்களில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமானின் தீர்த்தவாரி உத்சவம் நாளை (ஜன.20) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ரிஷப வாகனத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் (ஸ்ரீசந்திரசேரர்) நடராஜர் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகளில் வலம் வந்து முதல் தீர்த்தமான சிவகங்கையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் கிள்ளை குய்ய தீர்த்தம், புலிமடு தீர்த்தம் (அம்மாபேட்டை சக்திநகர்), வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில் குளம்), அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரர் கோயில் குளம்), நாகசேரி தீர்த்தம், (நாகசேரி குளம்), பிரம்மதீர்த்தம் (சிங்காரத்தோப்பு), சிவப்பிரியை தீர்த்தம் (தில்லையம்மன்கோயில் குளம்), திருப்பாற்கடல் தீர்த்தம் (வேங்கான்தெரு, மாணிக்கவாசகர் பர்ணாசாலை), பரமானந்த கூடம் (ஸ்ரீநடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு) ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுதளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.