கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் திடீர் மாற்றம் மாற்றம்
தேசிய முற்போக்கு திராவிடக்கழக கடலூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராக ஆர்.பாலு, மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.வி.பி.முத்துக்குமார், ஏ.பி.ராஜ், பொதுக்குழு உறுப்பினராக சி.ஆர்.
கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக்கழக நிர்வாகிகள் சிலர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிதாக நிர்வாகிகள் கட்சி தலைவர் விஜயகாந்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய முற்போக்கு திராவிடக்கழக கடலூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவராக ஆர்.பாலு, மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.வி.பி.முத்துக்குமார், ஏ.பி.ராஜ், பொதுக்குழு உறுப்பினராக சி.ஆர்.ஜெய்சங்கர், பரங்கிப்பேட்டை ஒன்றியக்கழக செயலாளராக பி.முகமதுமீரான், மங்களுக்கு ஒன்றியக்கழக செயலாளராக ஆர்.சேனாதிபதி, பரங்கிப்பேட்டை பேரூர் கழக செயலாளராக ஆர்.மணிமாறன் ஆகியோர் 19-1-2014 முதல் நியமிக்கப்படுகிறார்கள். கடலூர் தெற்கு மாவட்டம் ஆர்.ஞானப்பிரகாசம், ஆர்.பி.ராஜா, பி.முகமதுஅயூர், இ.ஆளவந்தான், எஸ்.ஜெயமணிகண்டதேவன், பி.ராஜமாணிக்கம், ஆர்.செந்தில்குமார் ஆகியோர் மேற்கண்ட அனைவரும் அவரவர் வகி்த்து வந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.