காட்டுமன்னார்கோயில் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த வனத்துறையினர்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு
காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலையை சிதம்பரம் வனத்துறையினர் பிடித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனவர் சோமசுந்தரம், வனக்காப்பாளர் ஜே.ராஜேஷ்குமார், செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தெருவிற்குள் புகுந்த நாலரை அடி நீள முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நீர்தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனர்.