இரு சக்கர வாகனத்திலிருந்த தவறி விழுந்த பெண் சாவு
கணவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தற்போதைய செய்திகள்இரு சக்கர வாகனத்திலிருந்த தவறி விழுந்த பெண் சாவு
கணவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கணவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரத்தைச் சேர்ந்தவர் ப.முருகன். இவரது மனைவி முப்பிடாதி (29). முருகன் இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் மனைவி அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி அருகே 2.6.15-ம் தேதி சென்று கொண்டிருந்தபோது, முப்பிடாதி தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து ராஜபாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் காயம் அடைந்த தலை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 9.6.15-ம் தேதி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் முப்பிடாதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கணவர் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.