முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தட்டு ஏந்தி நூதனப் போராட்டம்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி நூதனப்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:58 AM
பகிர்:

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் பணியிலிருந்து ஓய்வுபெற்றத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வைப்பு நிதி, ஒப்படைப்புத் தொகை, விடுப்பு சம்பளம், பஞ்சப்படி உள்ளிட்ட பணப்பலன்களை நிர்வாகம் வழங்கவில்லை.கடந்த 5 ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற 800 பேருக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பணப்பலன்களை வழங்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கையில் தட்டு ஏந்தி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் பொ. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியூ செயலர் ஆர். மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் துணைச் செயலர் எஸ். பத்மனாபன், பொதுச்செயலர் எ்ஸ. முத்துக்கிருஷ்ணன், நிர்வாகிகள் டி. பத்னாபன், பி. முத்துக் கிருஷ்ணன், சண்முகநாதன், சேதுராமலிங்கம், பொருளாளர் ஆர். ராமையாபாண்டியன் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →