முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை தற்கொலை முயற்சி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை  திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை  திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார்.

புளியங்குடியைச் சேர்ந்த பிச்சையா மனைவி ராஜேஸ்வரி (34), தனது குழந்தைகளான தவகீதா (10), ராஜபார்கவி (7) ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தமக்கு இடமாறுதல் வழங்காவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அழத்தொடங்கியவரை, பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் தடுத்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றப்பட்டது.

பின்னர் அவர் அளித்த மனு:வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் தாற்காலிகமாகப் பணியாற்றி வந்த எனக்கு கடந்த 9-1-2009 ஆம் தேதி முதல் நிரந்தர இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற பணிநியமன உத்தரவு கிடைத்தது. அதன்பின்பு எனக்கு பள்ளியை நிர்வகிக்கும் ஒருவரால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

தகாத வார்த்தைகளால்பேசுவது தொடங்கி கட்டாயப்படுத்தி விடுமுறை எடுக்க வைப்பவது வரை சிரமங்கள் ஏற்பட்டன. பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அவதூறு பரப்பினர். வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இதுகுறித்து கல்வித் துறையினரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →