முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கணவனை தாக்கி மனைவி தாலி சங்கிலி பறிப்பு

சிதம்பரம் அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவனை தாக்கி, மனைவியிடம் ஐந்தரை பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சிதம்பரம் அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவனை தாக்கி, மனைவியிடம் ஐந்தரை பவுன் தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர் மேற்குதெருவில் வசிப்பவர் பிரபுதாஸ் (29). கிராம உதவியாளரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து பிரபுதாஸை இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு, அவரது மனைவி ஈஸ்வரியின் கழுத்திலிருந்த ஐந்தரை பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.55 ஆயிரமாகும்.

இதுகுறித்து பிரபுதாஸ் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.