சிவகாசி அருகே அரிவாளால் வெட்டி இளைஞர் படுகொலை
சிவகாசி அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகாசி அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பாறைத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமியின் மகன் ராஜேஷ் என்ற பவுன்(28). இவர் மீது திருத்தங்கல், சிவகாசி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் திருத்தங்கல் பேட்டைத் தெருவில் நடந்து சென்றாராம். அப்போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இளைஞரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.