தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரை பதவி நீக்கம் செய்து மாவட்டத்தலைவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை :
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த யே.தேவதிரவியம் என்பவர் கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான விளம்பரம் செய்து வந்துள்ளார்.
எனவே கட்சித்தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அனுமதியோடு, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து யே.தேவதிரவியம் விடுவிக்கப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.