முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமையன்று ஆனி  வருஷாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமையன்று ஆனி  வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் சனிக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்பட்டு, காலை 8.25 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வநது பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Advertisement

வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் இணை ஆணையர் (பொ) ஆர்.பொன்சுவாமிநாதன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை, திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் (மது விலக்கு) ராஜாமணி, திருக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் பி.பட்டாணி, உதவி ஆய்வாளர் ராணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments