முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பைக் மோதி அரசு பேருந்து பணியாளர் சாவு

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On : 28 ஜூன், 2015 at 4:25 PM
பகிர்:

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(56). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இரவு பணிக்கு செல்வதற்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்ற போது எதிரே வந்த கொக்கலாஞ்சேரி ஊராட்சி தலைவர் ரமேஷ் ஓட்டி வந்த  இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னச்சாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் சின்னராஜா பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.