கடலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் 30,732 பேர் பிளஸ்டூ தேர்வெழுதினர்: ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தேர்வினை ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 191 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 80 தேர்வு மையங்களில் 30,732 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தேர்வினை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வான பிளஸ்டூ தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கடலூரில் உள்ள நகராட்சி பள்ளி, புனித வளனார் பள்ளி ஆகியவற்றில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பிளஸ்டூ தேர்வு வருகிற மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாவட்டத்தில் 191 பள்ளிகள், 80 தேர்வு மையங்கள் மூலம் 12,989 மாணவர்களும், 15,303 மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதை தவிர தனித்தேர்வுகள் 2,440 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் 30,732 பேர் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வினை கண்காணிக்க 1500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை தவிர 160 நிலைப்படையினரும், 80 முதன்மை காண்காணிப்பாளர், 80 துறை அலுவலர்கள், 80 கூடுதல் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை முன்னிட்டு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் எந்தவித அச்சமின்றி தேர்வை எழுதி தேர்வில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆட்சியருடன் ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, கோட்டாசியர் தி.ஷர்மிளா, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, புனித வளனார் பள்ளி தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், நகராட்சி பள்ளி முதன்மை கண்காணிப்பாளர் ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.