ஆதார் அட்டை கணக்கெடுப்பதாக கூறி, சிதம்பரத்தில் வீடுபுகுந்து 14 பவுன் நகைகள் திருட்டு
ஆதார் அட்டைக்கு கணக்கெடுப்பதாக கூறி மர்மநபர்கள் சிதம்பரத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
ஆதார் அட்டைக்கு கணக்கெடுப்பதாக கூறி மர்மநபர்கள் சிதம்பரத்தில் வீடுபுகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 14 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த சவிதா (38). இவரது கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால், தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். கவரிங் நகை தொழில் செய்யும் இவர் புதன்கிழமை பிற்பகல் மருந்துவாங்க கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாயார் சரோஜாவிடம் (70) மர்மநபர் ஒருவர் ஆதார் அட்டை கணக்கெடுக்க வந்துள்ளதாக கூறி ரேஷன் கார்டு கேட்டு, தாயாரை மாடிக்கு அழைத்துச் சென்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் தாயார் சரோஜா கீழே வந்து பார்த்த போது அப்போது மற்றொரு மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கீழ் அறையிலிருந்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.
இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.