முகப்பு
தற்போதைய செய்திகள்

கார்பன் தொழிற்சாலையில் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக 25 அடி உயரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த

தற்போதைய செய்திகள்

கார்பன் தொழிற்சாலையில் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக 25 அடி உயரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக 25 அடி உயரத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த லால்பகதூர் மகன் செமன்சிங் பகதூர் (21) கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் என்ற கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பரமாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் 25 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு செமன்சிங் பகதூர் என்பவர் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக செமன்சிங் பகதூர் தவறி கீழே விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் அவரது உறவினர் சேத்மன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →