நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து, ஆலங்குடியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்து, ஆலங்குடியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிபதி தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதில்,வழக்குரைஞர்கள் ராஜ்குமார், முத்தரசன், விஜயராஜகுமாரன், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.