சிதம்பரத்தில் ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை மற்றும் சீதாகல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை மற்றும் சீதாகல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மார்ச் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகோதண்டராமர் தேரில் எழுந்தருளிய பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேலவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் வளாகத்திலிருந்து தேர் புறப்பட்டு, நான்குவீதிகள் வலம் வந்தது. தேரினை திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் திருமஞ்சனம், சீதா கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்ச் 29-ம் தேதி காலை புஷ்பயாகம், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உத்சவம், பட்டாபிஷேகம், இரவு புஷ்ப பல்லக்கு, 31-ம் தேதி விடையாத்தி திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் டி.திருவேங்கடவன், வி.எஸ்.கிருஷ்ணமாச்சாரி, ஜே.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.