தூத்துக்குடியில் 80 சதவீத கடைகள் அடைப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தமிழகம் முழுவதும் விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனிக்கிழமை (மார்ச் 28) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 80 சதவீத கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் வழக்கம்போலவே இயங்கப்பட்டன. ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் வழக்கத்தைவிட குறைவாக இயக்கப்பட்டன. மருந்தகங்கள், சிறிய அளவிலான ஹோட்டல்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன. இதனால், இயல்பு வாழ்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.