முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி சாவு

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:26 AM
பகிர்:

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்த மாணவன் சூழலில் சிக்கி இறந்தான்.

மேலப்பாளையம் வெள்ளை கலீபாசாகிபு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் நியாஸ் (14). அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை நியாஸ் தனது நண்பர்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றாராம். ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த நியாஸ் சூழலில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயங்கிய நிலையில் நியாசை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நியாஸ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சென்று மாணவன் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →