கடலூரில் "நேரு பவன்' தமிழ் மாநில காங்கிரசுக்கு சொந்தம்: கோட்டாச்சியர் தீர்ப்பு
கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது.
கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று கடலூர் கோட்டாச்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் தமிழ் மாநில காங்கிரசுக்கே நேரு பவன் சொந்தமானது என்று கோட்டாச்சியர் தீர்ப்பளித்தார். இதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தனர்.