முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 1 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 7 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 4 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 1.6 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 2 மி.மீ மழையும்,சங்கரன்கோவிலில் 2 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே புதன்கிழமை விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் இடியுடன் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →