24 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழக அரசு எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில்
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கியது.
Advertisement
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி என மொத்தம் 20 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நான்கு நாள்கள் முடிவில் தமிழகத்தில் இதுவரை 24,606 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து இதுவரை 6,212 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18,394 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இதுவரை 3,800 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை மே 28-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி மே 29 ஆகும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.