முகப்பு
தற்போதைய செய்திகள்

அச்சிறுப்பாக்கம் அருகே நின்றிருந்த கார் மீது அரசு பேரூந்து மோதியதில் 2 பேர் பலி

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தொழுபேடு சாலையோரம் காரின் டயர் பஞ்சரை சரி செய்ய நின்றிருந்தபோது சேலம் நோக்கி வந்த அரசு பேரூந்து மோதிய விபத்தில் சம்பவ

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தொழுபேடு சாலையோரம் காரின் டயர் பஞ்சரை சரி செய்ய நின்றிருந்தபோது சேலம் நோக்கி வந்த அரசு பேரூந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர்கள் பலியானார்கள். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் அந்தோணி (45). இவரது மனைவி செல்வி (40). இவர்களது மகன் பிரவின்குமார் (13). அந்தோணி தனது குடும்பத்துடன், வேளாங்கண்ணி நகரில் இருந்து சென்னைக்கு காரில் வந்துக் கொண்டிருந்தனர். அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை தொழுபேடு பாலம் வழியாக, கார் வந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆகியது. அதனால் காரின் டயரை சரி செய்ய எதிர் திசையில் உள்ள பஞ்சர் கடைக்கு, அந்தோணி காரை ஓட்டிச் சென்றார். தொழுபேட்டை சேர்ந்த பஞ்சர் கடைக்காரர் கருணாகரன்(40) டயரை சரி செய்ய முயன்றார். அப்போது அவரருகே காரின் உரிமையாளர் அந்தோணி நின்றுக் கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பேரூந்து எதிர்பாராதவகையில் அந்தோணி, கருணாகரன் ஆகியோர் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் இறந்தனர். இது குறித்து மேலேமருவத்தூர் காவல்துறை ஆய்வாளர் ராமதாஸ் நேரில் சென்று விசாரணை செய்தார்.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →