முகப்பு
தற்போதைய செய்திகள்

தீபாவளிப் பண்டிகை: பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு:தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.

தற்போதைய செய்திகள்

தீபாவளிப் பண்டிகை: பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு:தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:28 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்களுக்கு விருதுநகர்  மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகை ஒரு ஒளித்திருநாளாகும்.

தீபாவளிப் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசினைத் தவிர்த்து, விபத்தில்லா தீபாவளிப் பண்டிகையை அனைவரின் ஒத்துழைப்போடும் கொண்டாட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வானவெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்படைத் தவிர்க்கவும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.

பெரியர்கள் உடன் இருப்பது அவசியம்.பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக் கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →