ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி ஊழியர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல்: மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி ஊழியர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல்: மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், லட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் மோசஸ் (32). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கள உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவரும் நகராட்சியில் பணிபுரியும் நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் சந்தனக்காளை என்பவரும் மங்காபுரம் பகுதியில் நோய்தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்க திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார்கள்.அப்போது மங்காபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் இருவர் மது போதையில் நகராட்சிப் பணியாளர்கள் இருவரையும் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாகப் பேசி தாக்கியுள்ளார்கள்.
இது குறித்து மோசஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.