கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்: கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்: கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வத்திராயிருப்பு, சேசபுரத்தைச் சேர்ந்தவர் ஏ.மகேஸ்வரி (25). இவரும் ராஜபாளையம், காமராஜர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜபிரபுவும், கிருஷ்ணன்கோவில் ஒரு கல்லூரியில் 2010-ம் ஆண்டு படிக்கும் போது ஒருவரையொருவர் காதலித்துள்ளார்கள். 26.9.2010-ம் தேதி சேத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். 2013-ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஓராண்டாக, ராஜபிரபு தனது மனைவியை தந்தை ராதாகிருஷ்ணன், தாய் ரெங்கு, சகோதரி கனகபிரியா ஆகியோரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, 100 பவுன் நகை வரதட்சிணையாக வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துவந்தாராம்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். காவல் ஆய்வாளர் எம்.மரியகுளோரி ராஜபிரபு உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.