திருப்பதிக்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அனுப்பும் நிகழ்ச்சி
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை
தற்போதைய செய்திகள்திருப்பதிக்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அனுப்பும் நிகழ்ச்சி
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தில் சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்டவை அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பூமிப் பிராட்டியான ஸ்ரீஆண்டாள சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்ஸவத்தின் 5-ம் திருநாளன்று சாற்றப்படும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
இதற்காக ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம், கிளி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.