ஆர்.எம்.எஸ்.எ திட்ட அலுவலகத்தில் கணினி கணக்காளர், விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட அலுவலகத்தில் கணினி கணக்காளர், கணித விவரப்பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட அலுவலகத்தில் கணினி கணக்காளர், கணித விவரப்பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாற்காலிகமான பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக கணினி கணக்காளர் பணிக்கு ரூ.7500ம், கணினி விவர பணியாளர் பணிக்கு ரூ.6 ஆயிரமும் மாதந்தோறும் வழங்கப்படும். இப்பணிக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதியான ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், டாலி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி விவர பணியாளர் பணிக்கு பிளஸ்டூ முடித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு, எம்.எஸ் ஆபிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இயங்கும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலகத்தில் வருகிற 28-ம்தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற அக்.13-ம் தேதிக்குள் அஞ்சலிலோ அல்லது நேரிலோ அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.