முகப்பு
தற்போதைய செய்திகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தனியார்

தற்போதைய செய்திகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தனியார்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:34 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தனியார் உணவகம் சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தலைமையில், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா தொடங்கி வைத்தார்.மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், நிலவள வங்கித் தலைவர் சிந்து முருகன், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் சரோஜா நடராஜன், அக்ரோ சர்வீஸ் தலைவர் கருமாரி எஸ்.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாமில் 270 நோயாளிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் கண்விழித்திரை பரிசோதனை நடத்தினர்.முகாமிற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் பி.அங்குராஜ், அரிமா சங்கத்தின் ஜாகீர் உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →