முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவு!

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2931 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நேர நிலவரப்படி 47.39 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரம் வருமாறு:

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அதிகபட்சம் 56.3 சதவீதம், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 49 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 46.5 சதவீதம், தென்காசி தொகுதியில் 51.99 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 46.9 சதவீதம், திருநெல்வேலி தொகுதியில் 42 சதவீதம், அம்பாசமுத்திரம் தொகுதியில் 50.3 சதவீதம், பாளையங்கோட்டை தொகுதியில்  குறைந்தபட்சம் 36.3 சதவீதம், நான்குனேரி தொகுதியில் 51.6 சதவீதம், ராதாபுரம் தொகுதியில் 43 சதவீதமும் வாக்குப் பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →