மின்கட்டணம் செலுத்த 16-ம் தேதி வரை அவகாசம்
புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி,
புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 9-ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பை அடுத்து, மின்நுகர்வோர் தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள மின் நுகர்வோர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.