தற்போதைய செய்திகள்

ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்க வேண்டும் என சில சக்திகள் எதிர்பார்க்கின்றன: ட்விட்டர் பதிவில் கிரண்பேடி கொதிப்பு

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் நான் ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்க வேண்டும் என சில சக்திகள் எதிர்பார்க்கின்றன என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநர், மாநில அரசு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. நாள்தோறும் இப்பிரச்னை தொடர்பாக கிரண்பேடி தனது கட்டுரை பதிவில் கருத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படுவதை சில சக்திகள் மிரட்டி தடுக்க முயல்கின்றன. வளர்ச்சி கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்களது செயல்பாடுகள் உள்ளன.

மேலும் ஊழல், முறைகேடுகள் இல்லாத புதுச்சேரிக்காக அனைவரும் ஒரணியில் திரள வேண்டும். ஆனால் என்னை ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்பட விரும்புகின்றனர். அது எக்காரணம் கொண்டு நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT