தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு: பிரேமலதா விஜயகாந்த்

தில்லி, ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்

DIN

புதுதில்லி: தில்லி, ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற தேமுதிக.,வை சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண் சோறு சாப்பிட்டார். பின்னர் பேசிய அவர் அணைகள் வறண்டு காணப்படுகின்றன.

அவற்றை தூர் வார வேண்டிய சரியான தருனம் இது தான். தேசிய நெடுஞ்சாலைகளைப்போல் தேசிய நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து நிர்வாகம் சரியில்லாமல் போனதால் விவசாயிகள் நலிவடைந்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு. தில்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை சந்திக்கவில்லை. விவசாயிகளின் பிரச்னை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பெரும் பங்கு உள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT