முகப்பு
தற்போதைய செய்திகள்

இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல் 

அருந்ததியினர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி மரணமடைந்த மகேஸ்வரனின் குடும்பத்துக்கு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:17 PM
பகிர்:

அருந்ததியினர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி மரணமடைந்த மகேஸ்வரனின் குடும்பத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அருந்ததியினர் சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி ஆதி தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன் தீக்குளித்து இறந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.அவருக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுக சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

அருந்ததியினர் சமுதாய மக்களின் சமூக,பொருளாதார முன்னேற்றத்துக்காக சிறப்புச் சலுகைகளை திமுக ஆட்சியில் தான் அளிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான கொள்கை முடிவு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.தொடர்ந்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன்காரணமாக இந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர்.

அதிமுக அரசு அருந்ததியினர் சமுதாயத்திற்கான 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல் வஞ்சித்துவிட்டது. அருந்ததியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகள் பற்றியும் கவலையில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக சார்பில், நல்லாட்சி அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →