டி.டி.வி.தினகரனிடம் விசாரணை மேற்கொள்ள சென்னை புறப்பட்டனர் தில்லி போலீஸார்
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தினகரன் பணம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பாக டி.டி.வி.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தினகரன் பணம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் தில்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று நேரில் விசாரணை மேற்கொள்வதற்காக தில்லி போலீஸார் சென்னை வருகின்றனர். மாலை 5 மணியளவில் அவர்கள் சென்னை வரக்கூடும் என தெரிகிறது.