தற்போதைய செய்திகள்

விப்ரோவில் 600 பணியாளர்கள் திடீர் நீக்கம்

விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி

விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனம் விப்ரோ. இந்நிறுவனத்தின் கீழ் 1.96 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பற்றி அந்நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே விப்ரோவின் 4ஆவது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கை வருகிற 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விசா நடைமுறைகள் சமீபகாலமாக கடுமையாக்கப்பட்டு வருவதால் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

SCROLL FOR NEXT