தற்போதைய செய்திகள்

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: திரிஷா

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால் இந்த பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கர்ஜனை படப்பிடிப்பில் கலந்து கொள்ள கோவை சென்ற அவரை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத வகையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் திரிஷா கோவை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். பின்னர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நடிகர் கமல் திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால்  திரிஷாவிற்கு எதிரான் போர்க்குரல் அதிகமானது.

இதையடுத்து நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்று திரிஷா விளம் கொடுத்துள்ளார். மேலும், ‘‘நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமையடைகிறேன். தமிழ் சமுதாயத்தையும், பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவள் நான். தமிழ் சமுதாய உணர்வுக்கு என்றுமே துணை நிற்பேன்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT