கொலம்பியாவின் தலைநகரில் வெடிகுண்டு தாக்குதல்: மூன்று பேர் பலி - 9 பேர் படுகாயம்
கொலம்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடித்தது.
கொலம்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடித்தது.
இதில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். நேற்று மாலை அந்த ஷாப்பிங் மாலின் 2 வது தளத்தில் உள்ள ஒரு கழிவறையில் குண்டுவெடித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுஒரு கோழைத்தனமான செயல் என குறிப்பிட்டுள்ளார்.