தற்போதைய செய்திகள்

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: ஏ.சி.சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

DIN

ஆரணி: அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஆரணிக்கு வந்திருந்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளரும் நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக உருவானபோது அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அதிமுக உடைந்து செல்வதை நான் விரும்பவில்லை.

தற்போதைய பிரச்னையால் அரசு நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. மக்கள் நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் வறட்சி, வெள்ளப் பெருக்கு மாறி மாறி ஏற்படுகிறது. எனவே, நதிகளை இணைக்க வேண்டும். விவசாயி அய்யாக்கண்ணுவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தின் நலன் கருதி "நீட்' தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதனை சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களால்தான் எழுத முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால், தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT