தற்போதைய செய்திகள்

ஒரு தலை காதலால் சென்னை வேளச்சேரியில் இளம்பெண் எரித்து கொலை

DIN

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் நேற்று திங்கள்கிழமை இரவு (நவ.13) வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, தன்னை காதலிக்க மறுத்த இந்துஜா என்பவரை ஆகாஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் இந்துஜா, அவரது தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரை காப்பாற்ற முயன்ற இந்துஜாவின் தாயார் ரேணுகா மற்றும் தங்கை நிவேதிதா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைமறைவான ஆகாஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஒருதலைக்காதல் விரக்தியால் காதலிக்கும் பெண்ணின் வீட்டை பெட்ரோல் ஊற்றி காதலன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT