சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மலேசியாவிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த இலங்கையை சோ்ந்த 2 பேர் கைது செய்து சுங்கவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.