ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மச்சிலிப்பட்டினம் விரைவு ரயிலின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தால் எந்தவித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்தின் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை.