தற்போதைய செய்திகள்

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது: உலக வங்கி கணிப்பு

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாக உலக

ANI

புதுதில்லி: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசியா பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், பணமதிப்பிழப்பு, பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றால் உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதால் தெற்காசிய மண்டல பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. 

முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா இன்னும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தனியார் முதலீட்டிலும் தனியார் நுகர்வுகளிலும் ஒரு தொடர்ச்சியான மீள்நிர்வதால் ஆதரவுடன் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும். உலகளாவிய வளர்ச்சியில் மீட்டெடுப்பதைப் பயன்படுத்தி முதலீடுகளையும் ஏற்றுமதிகளையும் துரிதப்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது. 

வங்கிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் ஜிஎஸ்டியின் செயற்பாடுகள் போன்றவற்றால் பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT