முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் படித்த பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த ராமேஸ்வரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்

Updated On : 20 ஏப்ரல் 2018, 8:18 am IST
பகிர்:

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த ராமேஸ்வரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்கட்டணம் செலுத்தாதால், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில், ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்தார். தற்போது இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் மின்கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கூறியும், மின்கட்டணம் செலுத்தப்படாமலே இருந்து வந்துள்ளது. 

Advertisement

Advertisement

இதையடுத்து நேற்று வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியிடம் தகவல் கூறிவிட்டு, மின்இணைப்பை துண்டித்து சென்றுள்ளனர். 

பின்னர், இதுகுறித்து பள்ளியின் மேலாண்மைக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம், ஒரு வார காலத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்திவிடுவதாக அளித்த உத்தரவாதத்தை அடுத்து, நேற்று மாலை மீண்டும் மின்இணைப்பு வழங்கப்பட்டது. 

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் பதவியேற்ற பின்னர், ஒருமுறை இந்த பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பயின்ற பள்ளியிலே, மின்கட்டணம் செலுத்தாமல் கல்வித்துறை அதிகாரிகள் தாமதப்படுத்தபடுத்தி வந்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments